ராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.!
இந்தியாவில் இருந்து ராமர், பாலம் அமைத்து தனது படைகளுடன் இலங்கை சென்றார். அங்கு ராவணணுடன் போரிட்டு கடத்தி செல்லப்பட்ட தனது மனைவி சீதாவை ராமர் மீட்டார். இதன் கதையை ராமாயணம் என்று வால்மீகி எழுதியுள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளில் உள்ளது. இதை தமிழில் கம்பர் எழுதியதால் கம்பராமாயணம் என்று அழைக்கப்படுகிறது.
இந்தியாவையும் இலங்கையும் இணைக்கும் விதமாக மணல் மற்றும் பாறை கற்களால் பாலம் போன்று கட்டப்பட்டதை போல் தென்பட்டு வந்தது. இது தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரை இருந்தது என்று கூறப்படுகிறது. இதை ஒரு சிலர் ஆதாம் பாலம் என்றும் ராமர் பாலம் என்று நம்பி வந்தனர். ஒரு சிலர் இயற்கையாக உருவான மணல் மேடு என்று கூறி வந்தனர். இதனால் பொது மக்கள் மத்தியில் ராமர் பாலம் குறித்து கருத்து மோதலுக்கு பஞ்சம் ஏற்பட்டத்தில்லை. ராமர் பாலம் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்தன. இது இயற்கையான மணல் மேடா இல்லை ராமர் படைகளுன் செல்லும் போது உருவாக்கப்பட்டதா என்று சந்தேகம் நிலவி வந்தது.
இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த சையின்ஸ் சேனல் நடத்திய ஆய்வில் ராமர் பாலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ராமர் பாலம் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இதை மனிதர்கள் தான் கட்டியுள்ளனர் என்று ஆய்வுகளின் முடிவின்படி அதிகாரப்பூர்வாக அறிவித்தது. மேலும் நாசா விண்வெளி ஆய்வு மைய அதிநவீன செய்கைகோள் உதவியுடன் வையும் வெளியிட்டது.
ஆய்வின் படி எடுக்கப்பட்ட கற்கள் மற்றும் மணல் மேடு குறித்து வெளிநாட்டு ஆராய்சியாளர்கள் கூறியதாவது: அதில் ராமர் பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 30 மைல் அமைந்துள்ள. மணல் மற்றும் கிடைத்த கற்களை பார்க்கும் போது, ராமர் பாலம் அமைக்கப்பட்ட பிறகே மணல் மேடு ஏற்பட்டுள்ளது. மணல் மேடுகளின் வயது சுமார் 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையாவை. இவ்வாறு அந்த தொகுப்பில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ராமர் பாலம் இருப்பது குறித்து தெளிவாக காட்டியது. துள்ளியமான அதிநவீன செயற்கைகோள் உதவியுடன் ராமர்பாலம் இருப்பதை காண முடிந்தது. மேலும் அந்த இந்தியா முழுவதும் அல்லாமல் உலம் முழுக்க பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.