விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்!

🌟 ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கடவுளின் அம்சத்தைப் பெற்றிருக்கும். அதேப்போல் நிறைய மரங்கள் சாத்வீக சக்திகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் எந்த மரத்தை வளர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

துளசி :
🌟 துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசியிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.

சந்தன மரம் :
🌟 சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றது. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

ஆத்திமரம் : 🌟 அத்திமரம் தத்தாத்திரேயின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மன சாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும்.

மாமரம் : 🌟 மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுப காரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது.

அரச மரம் : 🌟 அரச மரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழ் தீபம் ஏற்றி வலம் வர புத்திர தோஷம் நீங்கும்.

ஆல மரம் : 🌟 ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும்.

மருதாணி : 🌟 மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் பழங்களை தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டால் கெட்ட கனவுகள் வராது.

ருத்ராட்ச மரம் : 🌟 ருத்ராட்ச மரம் சிவனின் அம்சமாகும். ருத்ராட்ச கொட்டையை அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகும். கோபம் குறையும். மனதில் சாந்தம் உண்டாகும்.

வேப்பமரம் : 🌟 வேப்ப மரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தை சுற்றி மஞ்சள், குங்குமம் பூசி மஞ்சள் ஆடையை கட்டி மாலை சூட்டி மரத்தை வலம் வந்து வணங்கினால் சக்தியின் அருள் கிடைக்கும்.

வில்வ மரம் : 🌟 வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.