🏠வலம்புரிச் சங்கை வீட்டில் வைத்து வழிபடலாமா?

  🌺 நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வ படங்களை வைத்து வழிபடுவது மட்டுமல்லாமல் வீட்டினுள் நுழைய இருக்கும் தீய அதிர்வுகளை கட்டுப்படுத்த சில தெய்வீகமான பொருட்களையும் வைத்து வணங்குகின்றனர். அதேபோல் வீட்டில் வலம்புரி சங்கை வைத்து வழிபடலாமா என்று பார்ப்போம்.

🌺 தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பதினாறுவகை தெய்வீகப் பொருட்கள் வெளிவந்தன. அவற்றுள் வலம்புரிச் சங்கும் ஒன்றாகும். வலம்புரிச்சங்கு இருக்குமிடம் மஹhலட்சுமியின் இருப்பிடமாக கருதப்படுகின்றது. நம் வீட்டில் இதனை வைத்து வழிபட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மன அமைதி, மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

🌺 வலம்புரிச் சங்கினை வியாபார ஸ்தலங்களில் வைத்து வழிபட்டால் தொழிலில் வெற்றியும், மேன்மையும் உண்டாகும். இச்சங்கினை வீட்டில் வைத்து வழிபட்டால் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும்.

🌺 தெய்வத்திற்கு வலம்புரிச்சங்கினால் அபிஷேகம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். வலம்புரிச் சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.

🌺 நம் வீட்டில் வலம்புரி சங்கில் தண்ணீர் நிரப்பி அதில் துளசி இலை இட்டு அந்த தீர்த்தத்தை வெள்ளிக்கிழமைகளில் இல்லத்தில் தௌpத்தால் வாஸ்து தோஷம் நீங்கும். வலம்புரிச் சங்கு பூஜிக்கப்பட்டு வரும் இல்லங்களில், பிரம்மஹத்தி முதலான அனைத்துவகை தோஷங்களும் அகன்றுவிடும்.

🌺 செவ்வாய்தோஷத்தால் அவதிப்படும் பெண்கள் செவ்வாய் கிழமைகளில் இந்த சங்கில் பால் நிரப்பி செவ்வாய் கிரக பூஜை செய்தால் தோஷம் நீங்கி திருமணம் நடக்கும்.

🌺 கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்தால் கடன் விலகும். வீட்டில் வலம்புரி சங்கை எப்படி வைப்பது ?

🌺 சங்கை எப்பொழுதும் வெறும் தரையில் வைக்கக் கூடாது. தட்டு அல்லது வாழை இலையில் வைக்க வேண்டும். அதன் மீது பச்சை அரிசி அல்லது நெல் பரப்ப வேண்டும்.

🌺 சங்கு வடக்கு அல்லது தெற்கு முகமாக இருக்க வேண்டும்.

🌺 சங்கில் தண்ணிர் வைத்து துளசி அல்லது பூக்கள் வைக்கலாம். பணம், நாணயங்கள், தங்கம் அல்லது நவரத்தினங்கள் வைக்கலாம். 

மரத்தடியில் தெய்வங்கள் இருப்பது ஏன்?

🌴அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது வழக்கமாக இருக்கிறது. இதன் ரகசியம் என்ன தெரியுமா?

🐘விநாயகருக்கு துதிக்கையுடன் சேர்த்து ஐந்து கரங்கள் உண்டு. துதிக்கையில் புனித நீர்க்குடம் வைத்துள்ளார். பின் வலது கையில் அங்குசம், இடது கையில் பாசக் கயிறு, முன் பக்கத்து வலது கையில் ஒடித்த தந்தம், இடது கையில் அமிர்தகலசமாகிய மோகதம் ஆகியவை காணப்படும்.

🐘 அங்குசம் யானையை அடக்க உதவும் கருவியாகும். விநாயகரது அங்குசமோ மனம் என்ற யானையைக் கட்டிப் போடும் வல்லமை படைத்தது. அதனால் தான் அவரது முகம் யானை வடிவில் இருக்கிறது. அவர் பாசக்கயிறு கொண்டு தன் பக்தர்களின் எதிரிகளை கட்டிப் போடுகிறார்.

🌙ஒடிந்த தந்தம் கொண்டு பாரதம் எழுதுகிறார். இது மனிதன் முழுமையான கல்வியை பெற வேண்டும் என்பதை குறிக்கிறது. இடது கையில் மோதகம் வைத்துள்ளார். சாதாரண மோதகம் அல்ல இது. உலகமும் உருண்டை, இந்த மோதகமும் உருண்டை. உலகத்துக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பது போல, தனக்குள் சகல உயிர்களும் அடக்கம் என்பதையே இது காட்டுகிறது.

➦ இதே போல், அரச மரத்தடியில் விநாயகர் தவறாது இடம்பெற்றிருப்பார்.

➥ இது ஏன் தெரியுமா? அரசமரத்தடி நிழல் படிந்த நீரில் குளிப்பது உடல் நலத்திற்கு நல்லது. பெண்கள் அரச மரத்தைச் சுற்றி வரும்போது கிடைக்கும் காற்று, பெண்களின் கர்ப்பப்பை குறைபாடுகளை நீக்கும் சக்தி கொண்டது.

➦ எனவே கிராமங்களில் குளத்தங்கரையில் உள்ள அரச மரத்தடியில் பிள்ளையார் வைத்திருக்கிறார்கள். கிராமத்தில் இருப்பவர்களும் குளத்தில் குளித்து விட்டு அரசமரத்தைச் சுற்றிப் பிள்ளையாரை வணங்கிச் செல்கின்றார்கள்.

➥ அரசமரம், வேப்பமரம் இரண்டுக்கும் கீழே விநாயகர் மற்றும் நாகர் சிலைகளைப் பிரதிஷ்டை செய்வது மழை பெய்தாலும், நல்ல வெயில் அடித்தாலும் குடை தேவைப்படுகிறது. பனிக்காலத்தில் இளவெயிலாக இருக்கும். அப்போது குடை தேவையில்லை. அரசமரத்திலும், வேப்பமரத்திலும் மழை மற்றும் கோடை காலத்தில் இலைகள் நெருக்கமாக இருக்கும். தன் கீழே பிரதிஷ்டை செய்யப்படும் பிள்ளையாரையும், நாகராஜாவையும் அவை குடை போல இலைகளை விரித்து பாதுகாப்பதாக ஐதீகம். இயற்கையும் இறைவனை வணங்குகிறது என்பது இதன் ரகசியம்.

🍂 பனிக்காலத்தில் மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டு கட்டைகளுடன் நிற்கும். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, சூரியன் தன் கதிர்களை இந்த இடைவெளி வழியே பாய்ச்சி, விநாயகரையும், நாகரையும் வழிபடுவான். அதுமட்டுமல்ல! வெயில், மழை காலத்தில் மரத்துக்கு கீழே மனிதர்கள் ஒதுங்குவார்கள்.

☔ அப்போது அவர்கள் மழை, வெயிலில் இருந்து பெருமளவு பாதுகாக்கப்படுவார்கள். பனிக்காலத்தில் இளவெயில் பட்டால்தான் உடலுக்கு உஷ்ணம் கிடைக்கும். இப்படி, சீதோஷ்ண நிலையால் மனிதன் கஷ்டப்பட்டு விடக்கூடாது என்ற கருணையுடன், தெய்வங்கள் மரத்தடிகளை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டுள்ளனர்.

வீட்டில் எந்த இடங்களில் தீபம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும்?

🌾 தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டரக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்த தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி, வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள்.

🌾 மேலும் வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தன வரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் தீபத்தை சிறப்பிக்கும் மாதம் திருக்கார்த்திகை ஆகும். இந்த திருக்கார்த்திகை மாதத்தில் இல்லத்தில் திரு விளக்கேற்றி வழிபடுவது மிகவும் விஷேசமாகும்.

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் :

கோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து
💡விளக்குகள் தின்ணைகளில் : நான்கு 💡விளக்குகள் மாடக்குழிகளில் : இரண்டு
💡விளக்குகள் நிலைப்படியில் : இரண்டு
💡 விளக்குகள் நடைகளில் : இரண்டு 💡விளக்குகள் முற்றத்தில் : நான்கு
💡விளக்குகள் பூஜையறையில் : இரண்டு

💡கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்கலங்கள் உண்டாகும்.

💡 சமையல் அறையில் : ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

💡 தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் : எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

🍀 தீபத்தின் வகைகள் : தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் தீபலட்சுமியே நமோ நம என்று கூறி வணங்குவது அவசியம்.

🌸தீபத்தை பலவகைகள் உண்டு. அவை
🌟சித்ர தீபம் : வீட்டின் தரையில் வண்ணப் பொடிகளால் சித்திரக் கோலம் இட்டு, அதன்மீது ஏற்றப்படும் தீபம் சித்ர தீபம் ஆகும்.

🌟 மாலா தீபம் : அடுக்கடுக்கான தீபத் தட்டுகளில் ஏற்றப்படும் தீபம் மாலா தீபம் ஆகும்.

🌟ஆகாச தீபம் : வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றிவைக்கப்படும் தீபம் ஆகாச தீபமாகும். கார்த்திகை மாதம் சதுர்த்தி திதிநாளில் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், எம பயம் நீங்கும்.

🌟ஜல தீபம் : தீபத்தை ஏற்றி நதி நீரில் மிதக்கவிடப்படும் தீபத்திற்கு ஜல தீபம் என்று பெயர்.

🌟படகு தீபம் : கங்கை நதியில் மாலைவேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றிவைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்கு பெயர் படகு தீபம் ஆகும்.

🌟சர்வ தீபம் : வீட்டின் அனைத்து பாகங்களிலும் வரிசையாக ஏற்றிவைக்கப்படுபவை சர்வ தீபமாகும்.

🌟மோட்ச தீபம் : முன்னோர் நற்கதியடையும் பொருட்டு, கோயில் கோபுரங்களின் மீது ஏற்றி வைக்கப்படும் தீபம் மோட்ச தீபம் ஆகும்.

🌟சர்வாலய தீபம் : கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று, மாலைவேளையில் சிவன்கோயில்களில் ஏற்றப்படுவது சர்வாலய தீபமாகும்.

🌟அகண்ட தீபம் : மலையுச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றப்படுவது அகண்ட தீபம் ஆகும்.

🌟லட்ச தீபம் : ஒரு லட்சம் விளக்குகளால் கோயிலை அலங்கரிப்பது லட்சதீபமாகும்.

🌟மாவிளக்கு தீபம் : அரிசி மாவில் வெல்லம் போட்டு, இளநீர் விட்டுப் பிசைந்து உருண்டையாக்கி, நடுவில் குழித்து நெய் ஊற்றி திரிபோட்டு ஏற்றுவது மாவிளக்கு தீபம் ஆகும்.

சடாரி வைப்பதன் தத்துவம்!..

சடாரி அல்லது சடகோபம் என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பெற்ற கிரீடமாகும். இந்த சடாரி வைணவ கோவில்களில் இறை தரிசனத்திற்கு பிறகு, பெருமாளின் திருவடிகளாக பாவித்து, பக்தர்களின் தலையில் வைத்து எடுக்கப்படுகிறது. பெருமாள் கோவில்களில் பக்தர்களின் தலையில் சடாரி வைப்பார்கள்.

தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற, மரவுரி தரித்து வனவாசம் சென்றார் ஸ்ரீராமன். அப்போது பிரிய மனமில்லாத தன் மனைவி மற்றும் லட்சுமணன் உடன் சென்றனர். தசரதன், தான் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்களைக் காப்பதற்காகத் தன் உயிரினும் மேலான ராமனை கானகம் அனுப்பினான். இதை அறிந்த பரதன், தன் தமையன் வனம் சென்றதற்குத் தானும் காரணமாக ஆகிவிட்டதை எண்ணி வருந்தினான்.

அயோத்தியை ஆள்வதற்கு தமையனுக்கே உரிமை உள்ளது என்றும், தனக்கு அரியாசனம் ஏற்க விருப்பம் இல்லை என்றும் கூறி, தன் பரிவாரங்களுடன் காட்டுக்கு வந்து அயோத்தியின் சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்தித்தான். ஆனால், பரதனின் வேண்டுகோளை மறுத்த ராமபிரான், பரதன் சொல்வதுபோல் தான் அரசுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால், தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறியதுபோல் ஆகும் என்று மறுத்துவிட்டார்.

அதே நேரம், பரதனுக்கும் நாட்டை ஆள்வதில் விருப்பம் இல்லை. சிக்கலான இந்த நிலைக்கு ஒரு தீர்வாகத்தான், பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றான். தன் தலைமீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்திகிராமத்துக்கு வந்தான். ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் திருவடியை வைத்து பட்டாபிஷேகம் செய்து, ராமபிரானின் சேவகனாக ஆட்சிசெய்து வந்தான். அந்த தருணத்தில் அனைவருக்கும் இயல்பாக தோன்றும் சந்தேகமானது பரதன் பாதுகைகளை அரியணையின் மீது நேரடியாக வைக்காமல், அவரின் திருமுடியை வைத்து அதன்மேல்தான் திருவடிகளை வைத்தான். இது எப்படிச் சரியாகும்? என்ற கேள்வி எழுவது எல்லோருக்கும் இயல்புதான்.

இந்தக் கேள்விக்குப் பதிலளிப்பது போல் ஒருமுறை வைகுண்டத்தில் மகாவிஷ்ணு சயனம் கொள்வதற்காகச் சென்றார். எப்போதும் இல்லாத வழக்கமாக, அவர் தன் பாதுகைகளுடனேயே ஆதிசேஷன் மீது சயனம் கொண்டார். அந்தச் சமயம் முனிவர்கள் வந்திருக்கும் செய்தியைக் கேட்டு, அவர்களைக் காண தன் பாதுகைகளை ஆதிசேஷன் மீது வைத்துச் சென்றார். அவர் சென்றவுடன் ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும், சங்கும், சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின. பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் நான் இருக்கும் இடத்தில் நீ எப்படி இருக்கலாம்?, பாதங்களை அலங்கரிக்கும் நீ ஆதிசேஷன் மீது அமர்வதற்கு அருகதை அற்றவன் என்றெல்லாம் கூறின. இன்னும் கடினமான வார்த்தைகளால் தூற்றவும் தொடங்கின. எவ்வளவுதான் பொறுத்துக்கொள்வது? ஒரு கட்டத்தில் கோபம்கொண்ட பாதுகைகள், பகவானை தரிசிக்கவரும் ரிஷிகளும், முனிவர்களும் என்னையே வணங்குகின்றனர்.

நீங்கள் அவரது கரத்தில் இருந்தாலும் உங்களை யாரும் வணங்குவதில்லை என்று கூறின. ஆனாலும், அவை மூன்றும் விடுவதாக இல்லை. கௌரவத்தால் உயர்ந்த நாங்கள் இருக்கும் இடத்தில் நீ இருக்கக் கூடாது என்று கூறின. இதைக் கேட்டு மனம் நொந்த பாதுகைகள் விஷ்ணுவிடம் முறையிட்டன. எனது பார்வையில் எல்லாம் ஒன்றேயாகும். இதை அறியாத சங்கும், சக்கரமும், திருமுடியும் இதற்கான பலனை ஒருநாள் அனுபவிக்கும் என்று கூறினார். இதன் பலனாகவே திரேதா யுகத்தில் ஸ்ரீராமாவதாரத்தில் சங்கும் சக்கரமும் பரத, சத்துருக்ணனாகப் பிறந்தன. பாதுகைகளை இழிவுபடுத்திய அவை, தமது இந்தப் பிறப்பில் பாதுகைகளைத் தம் தலையில் சுமந்துசென்றன. மேலும், அந்தப் பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு இதுவே காரணமாக அமைந்தது.

இந்தச் சம்பவத்தை நமக்கு நினைவுபடுத்தவே பெருமாள் கோவில்களில் நமக்கு சடாரி வைக்கப்படுகிறது. இறைவனுக்கு முன்னே அனைவரும் ஒன்றே. அவன் சந்நிதியில் பணக்காரன் - ஏழை, உயர்ந்த ஜாதி - தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகள் இல்லை என்ற தத்துவத்தை நமக்கு உணர்த்தவே இப்படி சடாரி வைக்கப்படுகிறது.

ராகு - கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்?

🍀 ராகு - கேது என்பவை நிழல் கிரகங்கள் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகின்றன. நிழல் கிரகங்களாக இருந்தாலும் மிகவும் வலிமை வாய்ந்தவை ஆகும். பொதுவாக ஒருவருடைய ஜாதகத்தில் ராகு - கேது எந்த கிரகங்களுடன் சேர்ந்து இருக்கிறதோ, அந்த கிரகத்தின் அடிப்படை குணத்தை பிரதிபலிக்கும் தன்மை கொண்டவை. ராகுவும், கேதுவும் நல்ல கிரகங்களுடன் சேர்ந்தால், நல்ல பலனும், தீய கிரகங்களுடன் சேர்ந்தால் தீய பலனும் அளிக்கும் குணமுடையவை ஆகும்.

🍀 ஒருவரது ஜாதகத்தில் ராகு - கேது தோஷம் இருந்தால் திருமணம் தாமதமாகும். தொழிலில் திடீர் முடக்கம் ஏற்படும். தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தொந்தரவு தரும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் தள்ளிப்போகும். ராகு - கேது தோஷத்தை பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்ய ராகு - கேதுவிற்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம். ராகு - கேதுக்கு எப்போது பரிகாரம் செய்ய வேண்டும்?

🌹 செவ்வாய் திசையில் ராகு புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.

🌹 ராகு திசையில் ராகு புத்தி, கேது புத்தி நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.

🌹 சந்திரதிசையில் ராகு புத்தி, ராகு அந்தரம் கேது புத்தி, கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.

🌹 குரு திசையில், கேது புத்தி ராகு புத்தி நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.

🌹 சூரிய திசையில், எந்த புத்தி நடந்து கொண்டிருந்தாலும், அதில் ராகு அல்லது கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.

🌹 சனி திசையில் ராகு, கேது புத்தி-சூரிய புத்தியில் ராகு, கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.

🌹 கேது திசையில் சந்திர புத்தி, சூரிய புத்தி, புதன் புத்தியில் ராகு-கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.

🌹 புதன் திசையில் சந்திர - புத்தி, ராகு - கேது அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.

🌹 சுக்கிர திசையில் குருபத்தி-கேது ராகு அந்தரம் நடக்கும் பொழுதும் பரிகாரம் செய்யலாம்.

🌹 மேலும் ராகு ஆங்கில எண்.4 - க்கு அதிபதியாவார் 4,13,22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் ராகு ஆதிக்கம் உடையவர்கள் ஆவர்.

🌹 ராகு ஒவ்வொரு நாளிலும் வலிமைபெறும் காலம் 1.30 மணி ஆகும். இக்காலத்தில் சுபகாரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

ஏன் வீட்டில் துளசிச் செடியை வைக்க வேண்டும் என தெரியுமா?


🌷 இந்துக்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த தெய்வமாக கருதப்படும் செடி துளசி ஆகும். இந்துக்கள் துளசி செடி முன், தீபம் ஏற்றி பூஜை செய்வார்கள். துளசி விவா என்பது ஒரு முக்கியமான பூஜை ஆகும். இந்த பூஜையில், துளசி செடியை மகாவிஷ்ணுவை பிரதிபலிக்கும் ஷாலிகிராம் உடன் திருமணம் செய்து வைப்பார்கள். வீட்டில் ஏன் துளசி செடி வைத்து வணங்க வேண்டும்? அதன் பயன்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

துளசி உருவான கதை : 🌷 ஜலந்தரா என்ற ஒரு அசூரன் இருந்தான். இந்திரன்மீது சிவபெருமான் கோபப்பட்டதால், அந்த கோபத்தில் ஜலந்தரா பிறந்தார். ஜலந்தரா சிவனைப் போன்று சக்திவாய்ந்தவராக இருந்தார். அவர் அழகிய வெந்தாவை மணந்தார். வெந்தா விஷ்ணுவின் பெரும் பக்தை. அவளது பக்தி காரணமாக ஜலந்தரா யோக சக்திகளை பெற்றார். ஒவ்வொரு முறையும் ஜலந்தரா போருக்குச் செல்லும்போதும், வெந்தா விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தார்.

🌷 இது அசூரரின் வெற்றியை உறுதி செய்யும். ஒருமுறை ஜலந்தரா தேவர்களுடன் போர் செய்தான். சிவன் தேவர்களின் தலைவராக இருந்தார். ஜலந்தராவை தோற்கடிக்க இயலாதது என்று கடவுள்கள் அறிந்திருந்தனர். ஏனென்றால் வெந்தா பிரார்த்தனை செய்துகொண்டிருந்தாள். எனவே, விஷ்ணு ஜலந்தராரின் உருவில் வெந்தாவிடம் சென்றார். வெந்தா உன் தொழுகைகளை நிறுத்து, நான் சிவனை தோற்கடித்துவிட்டேன். இப்போது உலகம் முழுவதும் என்னைப் போன்று சக்திவாய்ந்தவர் இல்லை என்று சொன்னார். இந்த வார்த்தைகளை கேட்டு, அவள் பிரார்த்தனையை நிறுத்திவிட்டு, தன் ஆசனத்தில் இருந்து எழுந்தாள்.

🌷 ஆனால் அவள் அவ்வாறு செய்தபோது, ஏதோ தவறு இருப்பதை உணர்ந்தாள். அந்த நேரத்தில், சிவன் ஜலந்தராவை கொன்றுவிட்டார். வெந்தா இதை உணர்ந்து, விஷ்ணுதான் தன்னை ஏமாற்றிவிட்டார் என்று அறிந்துகொண்டாள். அவள் விஷ்ணுவிடம், நீங்கள் என் கணவரையும் காப்பாற்றி இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் என் கணவர் கொல்லப்படும்போது ஒரு கல்லைப்போல நின்று கொண்டு இருந்தீர்கள். உங்கள் பாவங்களைக் குறித்து ஒரு கல்லில் சிக்க வைக்கப்படுவீர்கள் என்று அவள் விஷ்ணுவை சபித்தாள். விஷ்ணுவை சபித்துவிட்டு வெந்தா இறந்து போனாள்.

🌷 வெந்தாவின் சாபத்தின் படி, விஷ்ணு சாலிகிராமத்தில் சிக்கிக் கொண்டு, துளசி ஆலை என்ற பெயரில் மறுபடியும் பிறந்தார். துளசியின் இலைகள் விஷ்ணுவின் வடிவம் ஆகும். அதனால் வீட்டில் துளசி செடி வைத்து வழிபட்டால் விஷ்ணுவின் பரிபூரண அருள் கிடைத்து வாழ்வில் ஏற்றம் உண்டாகும். மேலும் மருத்துவ ரீதியாக துளசிச் செடி இலையானது காய்ச்சல், குளிர், இருமல், நுரையீரல் கோளாறுகள், ஆஸ்துமா, இதய நோய்கள் மற்றும் சிறுநீரகக் கற்கள் போன்ற பல நோய்களை குணப்படுவதாக அறியப்படுகிறது. ஆகையால் துளசி செடியை வீட்டில் வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்!

🌟 ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு கடவுளின் அம்சத்தைப் பெற்றிருக்கும். அதேப்போல் நிறைய மரங்கள் சாத்வீக சக்திகளைக் கொண்டிருக்கும். அந்த வகையில் எந்த மரத்தை வளர்த்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

துளசி :
🌟 துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசியிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.

சந்தன மரம் :
🌟 சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றது. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

ஆத்திமரம் : 🌟 அத்திமரம் தத்தாத்திரேயின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மன சாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தின் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும்.

மாமரம் : 🌟 மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுப காரியங்கள் செய்யும் போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்கவிடப்படுகிறது.

அரச மரம் : 🌟 அரச மரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கீழ் தீபம் ஏற்றி வலம் வர புத்திர தோஷம் நீங்கும்.

ஆல மரம் : 🌟 ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் கீழ் அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும்.

மருதாணி : 🌟 மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் பழங்களை தூங்கும்போது தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டால் கெட்ட கனவுகள் வராது.

ருத்ராட்ச மரம் : 🌟 ருத்ராட்ச மரம் சிவனின் அம்சமாகும். ருத்ராட்ச கொட்டையை அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகும். கோபம் குறையும். மனதில் சாந்தம் உண்டாகும்.

வேப்பமரம் : 🌟 வேப்ப மரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தை சுற்றி மஞ்சள், குங்குமம் பூசி மஞ்சள் ஆடையை கட்டி மாலை சூட்டி மரத்தை வலம் வந்து வணங்கினால் சக்தியின் அருள் கிடைக்கும்.

வில்வ மரம் : 🌟 வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.