இல்லறம் முதல் ருத்ராட்சம் வரை

✾ சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோத்திரம். சனியை இரண்டு பக்கத்திலும் வைக்கலாம். செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன்றும் சைவக் கிரகங்கள், சைவக் கடவுள்கள் ஆகும். செவ்வாய் - முருகன், குரு - தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம் அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.

✾ இல்லறத்துக்கும் ருத்ராட்சத்துக்கும் சம்பந்தமில்லை. சிவபூஜை செய்யும் அனைவருமே ருத்ராட்ச மாலை அணியலாம். இல்லறத்துக்கு ஒரு மாலை, துறவறத்துக்கு ஒரு மாலை என்பது கிடையாது. துறவிகள் இதை தவிர வேறு மாலைகள் போட்டுக் கொள்ள மாட்டார்கள். இல்லறத்தில் இருந்து கொண்டே ருத்ராட்ச மாலை போட்டுக் கொள்ளலாம். தவறு ஒன்றும் இல்லை. அதே சமயத்தில் தர்ம - நியாயங்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ள வேண்டும். ருத்ராட்ச மாலையின் பெருமை ஆனது ஒவ்வொரு முக ருத்ராட்சத்துக்கும் ஒரு தேவதை மற்றும் தோஷம் விலக்கும் தன்மை உண்டு.

✾ ருத்ராட்சத்தை அணிந்து குளிக்கும்போது ருத்ராட்சத்தில் பட்ட நீர் நம்மீது படுவதால் புண்ணிய நதியில் குளித்த புண்ணியம் நமக்குக் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தீட்டுக் காலங்களிலும், மல, ஜல விசர்ஜன காலங்களிலும் ருத்ராட்சத்தைக் கழற்றி வைத்துவிட்டு சுத்தமான பின் அணியலாம்.

✾ அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள்ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக் கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.

✾ ருத்ராட்சத்தில் ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. பல்வேறு நூல்கள் இதைப் பற்றிக் கூறுகின்றன.

✾ ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.

✾ அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

✾ ஏழரை சனி, அஷ்டமத்து சனி எல்லாம் வந்தாலே பலர் தானே ருத்ராட்சத்தை விரும்பி அணிவதைப் பார்க்கலாம். ஏழரை சனி, அஷ்டமத்து சனி வந்தால் பழமையானவற்றை விரும்புவார்கள். ருத்ராட்சம், யானை தந்தம், யானை முடி மோதிரம் போன்றவற்றை அணிவார்கள்.

✾ மற்றவர்களிடம் இருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டுவதற்காக அல்லது அந்தப் பொருளின் மீதுள்ள ஒரு நம்பிக்கையினால் அவ்வாறு செய்வார்கள்.

✾ சனி திசை நடக்கும்போது தன்னம்பிக்கையை விட மற்ற பொருட்களின் மீதுதான் நம்பிக்கை அதிகமாக இருக்கும். அதை அணிந்து கொண்டால் அதனால் நமக்கு நன்மை அளிக்கும் என்றெல்லாம் நினைப்பார்கள்.

✾ சனி ராசி உள்ளவர்களும் ருத்ராட்சத்தை விரும்பி அணிவார்கள். மகரம், கும்ப ராசிக்காரர்கள் ருத்ராட்சத்தை விரும்புவார்கள். ருத்ராட்சத்தை அணியலாம். அதனால் நல்ல பலன்கள்தான் கிட்டும்.

✾ பஞ்சபூதங்களை எதிர்கொள்ளும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு. பஞ்சபூதங்களின் குறிப்பிட்ட விகிதச் சேர்க்கையே நவக்கிரகங்கள் ஆகும். நவக்கிரகங்களின் செயல்பாடுகளால்தான் ஒருவர் செய்ய கூடிய அனைத்து நல்லது கெட்டதிற்கும் காரணமாக அமைகிறது.

✾ ஒருவருக்கு ருத்ராட்சம் அணியும் எண்ணம் வருவதற்கே அவர் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும். ருத்ராட்சம் மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியது. மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றில் புண் உருவாகிறது. அதன் அடையாளமாக வாயில் புண் உண்டாகிறது. வயிற்றிற்கும், வாய்க்கும் இடைப்பட்ட கழுத்துப் பகுதியில் கட்டப்படும் ருத்ராட்சம் இந்த அதீத வெப்பத்தை உறிஞ்சி விடுகிறது. தவிர, கண்திருஷ்டியிலிருந்து நம்மைக் காக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு.

சந்திராஷ்டமம்

👉 ஜோதிட சாஸ்திரத்தில் நாம் பலன்களையும் எந்தெந்த நேரங்களில் என்ன காரியங்கள் தொடங்கலாம், எந்த காலகட்டங்களை தவிர்க்க வேண்டும் போன்றவற்றையும் தெரிந்துகொள்வதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அந்த வகையில், காலம் காலமாக இருந்து வரும் ஒரு நடைமுறை, சந்திராஷ்டமம்.

👉 சந்திராஷ்டமம் என்பது இரண்டேகால் நாட்களை கொண்டது. இந்த நாட்களில் புதிய முயற்சிகள், சுப காரியங்கள் ஆகியவற்றில் ஈடுபடலாகாது என்று நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர்.

👉 நாம் பிறந்த ராசியிலிருந்து எட்டாவது ராசியில் எந்த தினம் சந்திரன் சஞ்சரிக்கிறாரோ அன்றைய தினம் சந்திராஷ்டம தினமாகும். அஷ்டமம் என்றால் எட்டு. சந்திராஷ்டமம் என்றால் சந்திரன் எட்டில் இருப்பதாகும். இது அடிப்படை ஜோதிட இலக்கண விதியாகும்.

👉 நமது முன்னோர்கள் ராசியை கருத்தில் கொண்டு சந்திராஷ்டமம் (எட்டாவது ராசி) என்று பெயரிட்டனர். எனவே சந்திராஷ்டமத்தை ராசி ரீதியாக பார்ப்பதே சிறந்ததாகும்.

🌛 சந்திரன் இருக்கும் ராசியை குரு பார்த்தால் சந்திராஷ்டமம் கிடையாது. இதில் குருவின் நேரடியான ஏழாம் பார்வை ஆகாது. மற்ற ஐந்து, ஒன்பது ஆகிய பார்வைகள் தோஷத்தை நீக்கும். இந்த குரு பார்வை கணிதம் கோச்சாரத்திற்கு மட்டும் பொருந்துவதாகும்.

🌛 சந்திராஷ்டம தினத்தன்று அமாவாசையாக இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.

🌛 தான் பிறந்த நட்சத்திரத்திலிருந்து 16, 18வதாக வரும் நட்சத்திரத்தில் சந்திரன் இருந்தால் சந்திராஷ்டம தோஷம் இல்லை.

🌝 16வதாக வருவதை மைத்திர தாரை, அதாவது நட்பு நட்சத்திரம் என்றும் 18வதாக வருவதை பரமமைத்திரம், அதாவது நெருங்கிய நட்பு என்றும் மேலும் சாதகமானது என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

🌝 17வது நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம தோஷம் உண்டு, என்பதால் நாள்காட்டிகள் அந்த 17வது நட்சத்திரத்தை மட்டும் சந்திராஷ்டமமாக கூறியுள்ளன.

🌝 15, 19வது நட்சத்திரங்களில் சந்திரன் இருக்குபோது அது அஷ்டம ராசியாக அமைந்தால் சந்திராஷ்டமமாகிவிடும்.

👉 முடிவாக சந்திராஷ்டம நாட்களான இரண்டே கால் நாட்களிலும் எந்த விதமான சுபகாரியங்களையும், புதிய முயற்சிகளையும் செய்யாமல் ஒதுக்கிவிடுவது நல்லது. அதே நேரம், வேறு வழியில்லாமல் செய்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலை ஏற்படுகிறபோது, மேற்கண்ட விதி விலக்குகளை ஆராய்ந்து செயல்படுவது நல்லது.

கடவுளுக்கு குறிப்பிட்ட பூக்களால் அர்ச்சனை செய்வது ஏன்?

பூக்கள் பல வகை உண்டு. ஆனால் நாம் குறிப்பட்ட பூக்களை மட்டும் தான் பயன்படுத்துகின்றோம். அதிலும் சில குறிப்பிட்ட பூக்களை கொண்டு கடவுளுக்கு அர்ச்சனை செய்கிறோம். பூக்களால் அர்ச்சனை செய்வதால் நமக்கு எண்ணில் அடங்கா பலன்கள் கிடைக்கும். ஒவ்வொரு பூக்களுக்கும் ஒவ்வொரு பலன்கள் உண்டு.

தாமரை - தெய்வீகத்தன்மையை தரவல்லது. நமக்குள் ஒரு சக்தியை தந்து நம்மை இயங்க வைக்கிறது.

முல்லை மற்றும் மல்லிகை பூக்கள் - புனித தன்மையை வழங்கி உள சமநிலையை தரக்கூடியது.

துளசி - துளசியில் மகாவிஷ்ணுவின் அம்சம் நிறைந்துள்ளது. எந்த ஒரு பொருளைத் தானம் செய்யும் போதும், அந்தப் பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்வதால், கொடுக்கும் பொருளின் அளவும் மதிப்பும் கூடுகிறது.

மருக்கொழுந்து - நமக்கு தேவை இல்லாத துன்பங்களை நீக்கி தேவையான நன்மைகளை பெற மருக்கொழுந்து மலர் உகந்தது.

ரோஜா - எல்லோருக்கும் பிடித்த ரோஜா மலர்கள் ஆண்டவனிடம் அன்பு அதிகரிக்க செய்து இனிய எண்ணத்தை தந்து தியான உணர்வை வளர்க்கும்.

பவளமல்லி - நம் மனதில் சிறந்த எண்ணங்கள் மேலோங்கவும், விருப்பங்கள் நிறைவேறவும் பவளமல்லி பூக்கள் உதவும்.

எருக்கம் பூக்கள் - நமக்கு பயம் நீங்கி தைரியம் வரவேண்டும் எனில் எருக்கம் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

செம்பருத்தி, அரளி - இந்த இரு பூக்களும் நம் மனதை தவறான பாதையில் பயணிக்காது தடுத்து நன்நெறிக்கு இட்டு செல்கிறது.

நந்தியா வட்டப் பூக்கள் - பணம், பொருள் தேவையை நிவர்த்தி செய்யும் தன்மை வாய்ந்தது. குறிப்பிட்ட பூக்களால் அர்ச்சனைப் செய்யப்படும்

கடவுள் : விநாயகர் : விநாயகரை அருகம்புல் கொண்டு தான் அர்ச்சனை செய்வார்கள். பூக்களில் செம்பருத்தி, தாமரை, ரோஜா ஆகிய பூக்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

முருகன் : முருகனுக்கு மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா ஆகிய பூக்களுடன் சூரியகாந்தி பூவும் பயன்படுத்தலாம்.

துர்க்கை : துர்க்கைக்கு மல்லிகை, முல்லை, செவ்வரளி, செம்பவளமல்லி, சூரியகாந்தி, வெண்தாமரை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.

அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் தும்பை, வில்வம், செந்தாமரை, செம்பருத்தி, புன்னை, வெள்ளெருக்கு, நந்தியாவட்டம், செண்பகம் என்பவற்றால் அர்ச்சனை செய்யப்படும்.

விஷ்ணுவிற்கு : தாமரை, பவளமல்லி, மருக்கொழுந்து, ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்யப்படும்.

அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயில் - அந்தியூர்

மகிஷன் என்னும் அரக்கனைக் கொன்று மகிஷாசுரமர்த்தினி என்றும், பத்ரகாளி என்றும் பெயர் பெற்றவள் அன்னை ஆதிபராசக்தி. நவராத்திரி விழா நடப்பதே மகிஷாசுரமர்த்தினியின் பெயரால் தான். இந்த தேவி, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அருள்பாலிக்கிறாள்.
அந்தி என்றால் இறுதி என பொருள்படும். நமக்கு ஏற்படும் துன்பங்களுக்கெல்லாம் இறுதியான முடிவை அளிக்கும் வல்லமை படைத்தவள்.

🌿 மூலவர் - பத்ரகாளி

🌿 பழமை - 500 - 1000 வருடங்களுக்கு முன்

தல வரலாறு : 🔔 பசு ஒன்று காட்டில் மேய்ந்து விட்டு தினசரி பாலின்றி வெற்று மடியோடு வீட்டுக்கு வந்துள்ளது. பசுவின் உரிமையாளர் அப்பசுவைத் தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது, ஒருபுற்று அருகே பசு சென்றது. புற்றிலிருந்து ஐந்து தலை நாகமொன்று வெளிப்பட்டு பசுவின் ஐந்து மடிகளிலிருந்து பாலைக் குடித்தது. இதைப்பார்த்ததும் பசுவின் உரிமையாளர் அதிர்ச்சியுற்றார்.

🔔 அன்றிரவு அவரது கனவில் தோன்றிய ஒரு பெண், நான் பத்ரகாளி, நான் உன் பசுவின் பால் குடித்து மனநிறைவு பெற்றேன். என்னை இவ்விடத்திலேயே பிரதிஸ்டை செய்து வழிபடுக என்றாள். அம்மனின் அருள்வாக்கை ஏற்று அந்த இடத்தில் பக்தர்கள் கோயில் கட்டி வழிபடத் துவங்கினர். அம்பாளுக்குப் பத்ரகாளி என்ற பெயர் சூட்டப்பட்டது.

தல பெருமை : கனவில் பலன்: 🔔 அந்தியூரை அடுத்த எண்ணமங்கலத்தில் கணவனின் கொடுமை தாங்க முடியாத ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் இரவில் கிணற்றில் குதித்தாள். தூங்கி கொண்டிருந்த பூசாரியின் கனவில் அம்மன் சென்று உடனடியாக இளம்பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற கூறினாள். அதன்படி பூசாரி, கிணற்றில் குதித்து காப்பாற்றினார். இதை தொடர்ந்து கனவில் வந்து பலன்சொல்லும் அம்மனாக அந்தியு+ர் பத்ரகாளியம்மன் திகழ்கிறாள்.

சோம்பல் நீக்கும் குணம்: 🔔 சிலருக்கு எந்நேரமும் தூக்கம் வரும். இவர்கள் அந்தியு+ர் பத்ரகாளியிடம் தீர்த்தம் வாங்கிக் குடித்தால் இத்தகைய சோம்பலான உடல்நிலைக்கு விடிவுகாலம் வரும்.

பிரார்த்தனை : 🔔 திருமணம், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல் வியாபாரம் துவங்குதல், கல்வி போன்ற விஷயங்களுக்கு அம்மன் சிரசில் பு+ வைத்து, தொழில் துவங்கலாமா என வாக்குக் கேட்கும் வழக்கம் உள்ளது.

🔔 பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, தங்கள் தாலியையே காணிக்கையாக தருவதாக அம்பாளிடம் வேண்டுகின்றனர். குறிப்பாக, உயிருக்கு போராடும் கணவருக்காக இத்தகைய பிரார்த்தனையைச் செய்வது மரபாக உள்ளது.

எந்த காரியத்திற்கு எந்த கடவுளை வணங்க வேண்டும் தெரியுமா?

👉 எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள் தான். இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக தான். நாம் செய்யும் செயல் வெற்றி பெற எந்த கடவுளை வணங்க வேண்டும் என்பதை பார்ப்போம்.

நினைத்த காரியம் நடக்க :

🌺 விக்னங்கள், இடையு+றுகள் நீங்க - விநாயகர்

🌺 செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

🌺 நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

🌺 வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்

🌺 ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்

🌺 மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

🌺 கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி

🌺 திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

🌺 மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி

🌺 புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

🌺 தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கடாசலபதி

🌺 புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி

🌺 விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி

🌺 உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி

🌺 வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்

🌺 சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐயப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்

🌺 பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்

🌺 பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்

🌺 கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்

🌺 காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்

🌺 மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை

🌺 நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்

🌺 மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்

🌺 எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்

🌺 ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்

🌺 அம்மை நோய்கள் - மாரியம்மன்

🌺 ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும்........!