சங்கடஹர சதுர்த்தி விரதம்


நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சவுபாக்கியம் தரவல்லது சங்கடஹர சதுர்த்தி விரதம். ஆவணி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி தினத்தில் இவ்விரதத்தைத் தொடங்க வேண்டும். இரவு சந்திரன் உதயமாகும் பொழுது விநாயகரை வழிபட்டுச் சந்திரனுக்கு அர்க்கியம் தர வேண்டும் என்கிறது சாத்திரம். 

அன்று சந்திரன் தெரியாமல் இருந்தால் அடுத்த நாள் பூஜை செய்யவேண்டும். மாசி மாதம் தேய்பிறைச் சதுர்த்தி மிக மிக உயர்வானது. அதுவும் செவ்வாய்க்கிழமை அந்நாள் அமைவது மிகவும் விசேஷம். 

அது மகா சங்கடஹர சதுர்த்தி என்றழைக்கப்படுகிறது. அந்நாளில் காலையிலிருந்து உபவாசம் இருந்து கணபதியைத் தியானிக்க வேண்டும். இரவு பூஜை முடித்த பின் கணேச நிவேதனத்தை மட்டும் உண்டு தனிமையில் உறங்க வேண்டும். 

சதுர்த்தியின் மகிமை:

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார். ஸ்காந்தத்தில் எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப்பெறும். 

காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற் கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி! ஆண்டுக்காலம் விரத்தைத்தை மேற் கொண்டு தன் பதியை அடைந்தாள். 

இந்திரன், சிவன், ராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டதும், தமயந்தி நளனை அடைந்தது. அகலிகை கவுதமரை அமைந்தது போன்றவை நிகழ்ந்ததும் விரதத்தின் மகிமையால் தான்.