கோவிலில் செய்யக் கூடாத சில தகவல்கள்!

✩ கோ எனில் கடவுள் அல்லது அரசன் என்று பொருள். இல் என்றால் குடியிருக்குமிடம் என்று பொருளாகும், இங்கு கோவில் எனப்படுவது கடவுள்ஃதெய்வம் குடியிருக்குமிடம் என்பதாகும்.

✪ அப்படிப்பட்ட கோவிலில் மனிதர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்று சில விடயங்கள் உண்டு.

கோவிலில் செய்யக்கூடாதவை சில விடயங்கள் :
✫ கோவிலில் யாரும் தூங்கக் கூடாது.
✬ தலையில் துணி, தொப்பி அணிந்து செல்லக்கூடாது.
✭ கொடிமரம், நந்தி, பலிபீடம் இவைகளின் நிழல்களை யாரும் மிதிக்கக் கூடாது.
✮ விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது) வணங்கக் கூடாது.
✯ மூலவருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரக்கூடாது.
✰ குளிக்காமல் கோவிலுக்குப் போகக்கூடாது.
✱ கையில் விளக்கு ஏந்தி ஆராதனை காட்டக் கூடாது.
✲ கோவிலுக்குள் மனிதர்கள், மனிதர்களின் காலில் விழுந்து வணங்கக் கூடாது.
✳ கோவிலுக்கு சென்று திரும்பிய உடன் கால்களை கழுவக் கூடாது. ✴ கோவில் படிகளில் உட்காரக் கூடாது.
✵ சிவன் பெருமான் கோவில்களில் அமர்ந்து வரவேண்டும், பெருமாள் கோவில்களில் அமரக் கூடாது.
✶ வாசனை இல்லாத மலர்களை பூஜைக்கு அல்லது தெய்வங்களுக்கு தரக்கூடாது.
✷ மண் விளக்கு ஏற்றும் முன் அவைகளை கழுவி சுத்தம் செய்யாமல் ஏற்றக் கூடாது.
✸ கிரகணம் இருக்கும் பொழுது கோவிலுக்கு செல்லக் கூடாது.
✹ கோவிலுக்கு சென்று விட்டு வெளியே வந்த பின் தர்மம் செய்யதல் கூடாது.
✺ கோவிலுக்குள் வந்தவுடன் புண்ணிய தீர்த்தங்களில் காலை வைக்கக்கூடாது.

✻ முதலில் நீரை தலையில் தௌpத்துக் கொண்டு கால் அலம்ப வேண்டும்.
✼ குளத்தில் கல்லைப் போடக்கூடாது.
✽ கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
✾ தாம்பூலம் தரித்துக் கொண்டு கோவிலுக்குள் செல்லக்கூடாது.
✿ சுவாமிக்கு நிவேதனம் ஆகும் போது பார்த்தல் கூடாது.
❀ தேவதைகள் பலிபீடத்திற்கு நடுவிலும், லிங்கத்திற்கும் நந்திக்கும் நடுவிலும் செல்லக்கூடாது.
❁ எவருடனும் வீண் வார்த்தைகள் கோவிலில் வைத்து பேசக்கூடாது. இந்த வழிமுறைகளை பின்பற்றி, மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளின் அருளை பெறுவோம்.....!