எந்த கிழமையில் வரும் பிரதோஷ நாளில் நந்தியை வணங்குவதால் என்ன பலன்?


🌀 பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் குறைந்தது 4 தோஷங்களாவது இருக்கும். எத்தனை தோஷங்கள் இருந்தாலும், பிரதோஷ தினத்தில் சிவனையும், நந்தியையும் வழிபடுவதன் மூலம் பயன்பெறலாம்.

🌀 பிரதோஷ நேரம் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை உள்ள காலம். வளர்பிறை, தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. சிவனையும், நந்தி பகவானையும் எந்தக் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.

🌀 ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் நந்தி வழிபாடு செய்தால் திருமணத்தடை விலகி திருமணம் நடைபெறும். மங்களகரமான நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.

🌀 திங்கட்கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் நந்தியை வழிபட்டு வந்தால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.

🌀 செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் சிவபெருமானையும் நந்தி தேவரையும் வழிபட்டு வந்தால் பஞ்சம் அகலும். நோய் நொடிகளற்ற வாழ்வு கிடைக்கும். நல்ல உத்தியோகமும், உயர் பதவியும் கிடைக்கும்.

🌀 புதன் கிழமையில் வரும் பிரதோஷ நாட்களில் நந்தியை வழிபட்டு வந்தால் புத்திர பாக்கியம் கிட்டும்.

🌀 வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் நந்தி பகவானை வழிபட்டு வந்தால் கல்வித் தடை நீங்கும். புத்திக்கூர்மை அதிகரிக்கும். நல்ல எதிர்காலம் அமையும்.

🌀 வெள்ளிக் கிழமைகளில் வரும் பிரதோஷ காலங்களில் சிவபெருமானை வழிபட்டு வந்தால் எதிரிகள் தொல்லை நீங்கும். இல்லத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும்.

🌀 பிரதோஷ நாட்களில் மிகவும் முக்கியமாக கருதப்படும் நாள் சனிப்பிரதோஷம் ஆகும். சனிப்பிரதோஷம் அன்று சிவபெருமானையும், நந்தி தேவரையும் வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். அனைத்து கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களிலும் சென்று வழிபட்டால் நல்ல வாழ்க்கை அமையும்.